மிளகாய்தூள் தூவி சித்திரவதை செய்த கோப்பாய் பொலிஸார்!

அக்காவையும்,‌ தம்பியையும்‌ கடுமையாக கோப்பாய்‌ பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்து பாதிக்‌கப்பட்டவர்கள்‌, மனித உரிமைகள்‌ ஆணைக்குழுவினது‌ யாழ்ப்பாண‌ பிராந்திய அலுவலகத்தில்‌ முறைப்பாடு.ஒன்றினை பதிவு செய்துள்ளனர்‌.

அவர்களின் முறைப்பாட்டின்படி,

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் புத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவர் இருபாலையில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தலை மறைவாகியுள்ளதாக கூறி 21ம் திகதி சகோதரியின் வீட்டினை கோப்பாய் பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன் போது குறித்த நபர் அங்கில்லை என திரும்பி சென்றனர்.. பின் அதே நாள் இரவு 1மணியளவில் பொல்லுகளுடன் நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாக கோப்பாய் பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன் பின் 23ம்‌ திகதி சந்தேகநபர் இருக்கும் இடத்தை அறிந்தபின் அவரை பொலிசில்‌ ஒப்படைக்க கொண்டு சென்றனர்‌.

செம்மணிப்‌ பகுதிக்கு அழைத்து வர சொல்லி அங்கு வைத்து கடுமையாக‌ தாக்கி கைது செய்து பொலிஸ்‌ நிலையத்திற்கு அழைத்து‌ சென்றனர்‌.

பின் அதேநாள் இருபாலையில் உள்ள சகோதையின் வீட்டுக்கு வந்த பொலிஸார்‌ சகோதரி மீது சந்தேகம் இருப்பதாக கூறி 23ம்‌ திகதி காலை 9 மணியளவில்‌ கைது செய்தனர்‌.

பின் 2 நாட்கள்‌ கோப்பாய் பொலிஸ்‌ நிலையத்தில்‌ வைத்து மிளகாய்‌ தூளினை கண்களில்‌ தூவி பெண்‌ பொலிஸார்‌ இரு கைகளலும்‌ பிடித்து இருக்க ஆண்‌பொலிஸார்‌ தடிகளால்‌ கடுமையாக‌ தாக்கியதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.