பல பாகங்களில் மின்சாரத்தடை!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் பல பாகங்களிலுன் மின்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

பல பிரதேசங்களில் மின்தடை ஏற்பட்டதை அடுத்து ஒரு மணித்தியாலத்தில் 5ஆயிரத்திற்கும் அதிகளவான அழைப்புக்கள் இலங்கை மின்சார சபைக்கு வருவதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

யாய் சூறாவளியினால் நாட்டின் பல பிரதேசங்களிலும் நேற்றிரவு முதல் கடும் மழையுடனான காற்று வீசியது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரதடை ஏற்பட்டது.

கடுமையான காற்று காரணமாக மரங்கள் முறிந்தமையினால் இந்நிலை ஏற்பட்டது.

மின்சார வழங்களை வழமைக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் சீரற்ற காலநிலையினால் தாமதம் ஏற்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.