மூன்று மாதத்தில் இலங்கை மின்சார சபையின் இலாபம் 8,200 கோடி

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் இலங்கை மின்சார சபையின் இலாபம் 8,200 கோடி ரூபா இலாபம் ஈட்டியமையால், பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கான துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்ற குழு மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதத்தினால் குறைப்பதற்கு பரிந்துரை செய்துள்ளது.

மின்சார சபைக்கு கிடைத்த இலாபத்தை கருத்தில் கொண்டு பொது பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்த குழுவின் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் மக்களின் பொருளாதார சிரமங்களை ஓரளவு குறைக்க முடியுமென அவர் தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் மின்சார சபையின் திரட்சியான இலாபம் 6,000 கோடி ரூபா எனவும் 2024 ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் பெறப்பட்ட 5,100 கோடி ரூபாவையும் சேர்த்து 2024 மார்ச் 31 ஆம் திகதி வரை 8,200 கோடி ரூபா இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாக அக்குழு தெரிவிக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.