அம்பாறையில் அடுத்தடுத்து மோதிய கார், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி

பிரதான வீதியில் பயணம் செய்த சில வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சிலர் காயமடைந்த சம்பவம் அம்பாறை மருதமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை(12) கடும் மழை பெய்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.
மட்டக்களப்பில் இருந்து நிந்தவூர் பகுதியை நோக்கி சென்ற கார் திரும்ப எத்தனித்த போது  ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் பஸ் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி இவ் விபத்து ஏற்பட்டதென ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டிகளில் வந்தவர்கள் விபத்தில் காயமடைந்து வைத்து சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதால் வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் செயல்படுமாறு பெரியநீலாவனை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.