பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

இப்போது ஏற்பட்டுள்ள சிலநடைமுறை சிக்கல்களைத் தீர்த்து உடனடியாக அனைத்து மாணவர்களுடனும் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தில் 50சதவீதமான மாணவர்களுடன் பல்கலைக்கழக செயற்பாடுகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சகல மாணவர்களையும் உடனடியாக அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பல்கலைகழக மாணவர்ஒன்றியம் கோரியுள்ளது.

இந்நிலையில் பரீட்சைகளை நடத்துதல், இணையவழி கற்பித்தல் மற்றும் புதியமாணவர்களை இணைத்து கொள்வதற்கான செயற்பாடுகள் என்பன இப்போது பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆணைக்குழு மேலும்  தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.