தனது 19வயது மகளுடன் உறவு கொண்ட தந்தை! பிறந்த சிசுவை கொலை செய்த கொடூரம்!

தன்னுடைய 19வயதுடைய மகளுடன் உறவு கொண்டதன் மூலம் பிறந்த குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்த 41வயதுடைய தந்தை இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வ்பிறந்து மூன்றூ நாட்களேயான  சிசுவின் சடலம் அம்பாறை, கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் பொலிஸாரால் இன்று (05) மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை சென்னல் கிராமம் பகுதியில் வசித்து வரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளாந்த கூலி தொழிலாளியான குறித்த சந்தேக நபர், 2வது திருமணம் செய்தவர் எனவும், இப்பொழுது இவர் மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதலாவது  திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தன்னுடைய மகள் மற்றும் 2வது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டதன் ஊடாக பிறந்த குழந்தையினையே  இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக கைது செய்யப்பட்ட நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் நடாத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.