தளபதிகளது 5நாள் தண்ணீர் செலவு 11 இலட்சம்!

இலங்கை இராணுவ படைகளின் தளபதிகள் தமது சுகபோக வாழ்வினை விட்டுவிடுவதற்கு  தயாராக இல்லை.

2022ம் ஆண்டில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிக்கு வந்த இராணுவ தளபதிகள் குழு, உண்டு மகிழ்வதற்காக, ஐந்து நாட்களுக்கு கிட்டத்தட்ட 11 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட  சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக செலவினங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் திறைசேரி விடுத்த சுற்றறிக்கைக்கு முரணாக இத்தொகை செலவிடப்பட்டுள்ளதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின் படி, மேற்படி பணியாளர் கல்லூரியின் விவகாரங்களை ஆய்வு செய்ய வந்த பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் முப்படை தளபதிகளுக்கே இந்த தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுவிருந்திற்கென பெருமளவு பணம் அள்ளிவீசப்பட்டுள்ளமையும் அம்பலமாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.