கடல் ஆமையுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது

கடல் ஆமையுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது
கடல் ஆமையுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் கடலாமை இறைச்சி வைத்திருந்த இருவரும் நேற்றைய தினம் அதாவது ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 21 கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது.

குருநகர் பகுதியில் பிடிக்கப்பட்ட கடலாமைகள் இரண்டினை நாவற்குழிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கிய போதே சாவகச்சேரி பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு போலீசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.