யாழ்ப்பாண- தமிழக படகு சேவையை ஆரம்பித்து வைத்தார் மோடி

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும், யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி தொழில்நுட்பம் மூலம் சற்றுமுன் ஆரம்பித்து வைத்தார்.

காலை 11.30 மணிக்கு யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தை பயணிகள் சேவை கப்பல் வந்தடையவுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் இந்த கப்பல், மாலை 5 மணிக்கு நாகப்பட்டின துறைமுகத்தை சென்றடையவுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய நரேந்திரமோடி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகுச் சேவைகள் இணைப்பை மேம்படுத்தவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால பிணைப்புகளை வலுப்படுத்தவும் உதவுமென தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.