போதை பொருளை தடுக்க முருகனின் ஆசி வேண்டி நல்லூரில் குவிந்த பொலிசார்!

இலங்கை முழுவதும் போதை பொருளை திறப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி சரித்திர புகழ் பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிஸார்  விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

யுக்திய நடவடிக்கை ஊடாக போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் என 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிசார் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தனர்.

இதன் போது யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ் பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் , யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.