யாழ்ப்பாணம் சட்டநாதர் கோவில் வீதியில் முதியவரின் சடலம் மீட்பு!


யாழ்ப்பாணம் – சட்டநாதர் கோவிலுக்கு அருகில், நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் வீட்டில், சட்ட வைத்திய அதிகாரி , தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த பகுதியை சேர்ந்த விஸ்வநாதப்பிள்ளை யோகேந்திரன் (வயது 62) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவ இடத்தில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.