வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் வீடு ஒன்றை நிர்மாணிக்க காணி இல்லாமல் வாடகை அடிப்படையில் வாழும் குடும்பத்திற்கு நிரந்தரவீட்டை வழங்குவதற்கான திட்டத்தை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு மலிவுவிலையில் வீட்டுதிட்டம் ஒன்றை வழங்கும்  தேசியவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக தெரிவு செய்ய படுபவர்களுக்கு முதற் கொடுப்பனவாக 5இலட்சம் ரூபாய் செலுத்தும் வசதி இருக்கவேண்டும்.

வீட்டின் பெறுமதிக்கு அமைவாக மேலதிக பணத்தை வருடத்திற்குள் தவணை முறையில் அறிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவசியமானவர்களுக்கு வங்கிமூலம் கடன்பணம் பெற்று கொடுக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தேசியவீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான ரணபொகுணகம காணியில் 72 வீட்டுதொகுதிகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.