வீட்டில் தூசு தட்டியவர் , தவறி விழுந்து பலி!

வீட்டில் தூசு தட்டியவர் , தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் அராலி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வடிவேலு பரமகுலதேவராசா (வயது 75)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயரத்தில் ஏறி தனது வீட்டில் தூசு தட்டி கொண்டிருந்த போது, தவறி விழுந்துள்ளார். இதனை அடுத்து யாழ், போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.