நாச்சிக்குடா முஸ்லீம் கலவன் பாடசாலை என மாற்றப்பட்ட பெயர் ஏற்கப்படாது!

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாக பயன்படுத்துமாறு வட மாகாண கல்வி திணைக்களம் பணிப்புரை வழங்கியுள்ளது.

“நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயர் 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் திருத்துமாறு வடக்கு மாகாண கல்வி திணைக்களம்  கடிதம் அனுப்பியுள்ளது.

இப்பெயர் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, ‘கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை’ என்ற பெயரே உத்தியோகபூர்வமானது” என மாகாண கல்வி பணிப்பாளர் குயின்ரஸ் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் தற்போதைய அதிபர், நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை என்ற இறப்பர் முத்திரையை பயன்படுத்தி க.பொ.த. சாதாரண தர பரீட்சை மாணவர்களின் அனுமதி அட்டைக்கு கையொப்பம் இட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.