படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழில்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில், அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில்ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு ஊடகவியலாளர்கள் பலரும் தமது அஞ்சலியினை செலுத்தினர்.

தராக்கி சிவராம் என அழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் 2005 சித்திரை 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகில் உயிரிழந்த சடலமாக மீட்கப்பட்டார்.

செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகை அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த போது 2007 சித்திரை 29ம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் யாழ் ஸ்ரான்லி வீதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.