தாயும் மகளும் நடத்திய விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகை

கண்டி – ஹந்தான பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்து, சந்தேக நபர்கள் மூவரை கைது செய்ததாக கண்டி குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

மகள் விபச்சார மையத்தின் மெனேஜராகவும், தாய் காசாளராகவும் பணிபுரிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபச்சார விடுதி தொடர்பில் கடந்த இரு வாரங்களாக காவல்துறை அதிகாரிகள் தொடர் விசாரணைகளை நடத்தி வந்தநிலையில், 5000 ரூபா பணத்தினை செலுத்தி சேவை பெறச்சென்ற வாடிக்கையாளர் போன்று சென்றே சந்தேகநபர்களை கைது செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.