வயலில் எரிந்த நிலையில் சடலம்! கொலையா தற்கொலையா?

தமன, விகலாமடு பிரதேசத்தில் வயல் நிலமொன்றில் எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (30) காலை தமன பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

45 வயதுடைய புதிய நகரம், எராகம 03 பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.