பெண்ணொருவர் கொடுத்த புகாரில் அவரது காதலன் கைது!

கனடாவில் இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 28 வயது நபர் பாலியல் கடத்தல் விசாரணையை எதிர்கொள்கிறார்.

கல்கரி பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞர் மீதே குறித்த இளம் பெண் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் தற்போது கைது நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இளம் பெண் கைதான இளைஞரை காதலித்து வந்துள்ள நிலையில் அந்த நபர் குறித்த பெண்ணுடனான உறவை தவறாக பயன்படுத்திக்கொள்ள முயன்றதுடன், தகாத தொழிலுக்கும் கட்டாயப்படுத்தியுள்ளார்.

ஒருகட்டத்தில் அந்த நபரிடம் இருந்து தப்பிய குறித்த பெண், கல்கரி பொலிசாரிடம் நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணை முன்னெடுத்த பொலிசார், Jordan Fay என்பவரை இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்தனர்.

அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ள நிலையி்ல் , Jordan Fay என்பவரால் பாதிக்கப்பட்ட பலர் இருக்கலாம் எனவும், அவர்கள் முன்வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.