ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!!

 

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தி 24 மணி நேரத்திற்குப் பின்னர் ஈரான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மேலும் பதட்டங்களை அதிகரித்துள்ளன. இது ஒரு பரந்த மோதலுக்கான அச்சத்தைத் தூண்டியது.

ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானின் சிஸ்தான் – பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் மறைவிடங்களுக்கு எதிராக பாகிஸ்தான் உளவுத்துறை அடிப்படையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது.

இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு “மார்க் பார் சர்மாச்சார்” (சர்மாச்சாருக்கு மரணம்) என்று குறியீட்டுப் பெயரை பாகிஸ்தானால் சூட்டப்பட்டது.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.

ஈரானின் வெளியுறவு அமைச்சகம், தாக்குதல்களுக்கு விளக்கங்களை வழங்க தெஹ்ரானில் உள்ள மூத்த பாக்கிஸ்தான் தூதரை வரவழைத்தது.

ஈரான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் பஞ்ச்கூர் நகருக்கு அருகில் ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற ஆயுதக் குழுவிற்கு எதிராக ஈரான் “ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை” பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு பாகிஸ்தானின் பதில் தாக்குதல் வந்தது.

இதேநேரம் பாகிஸ்தானுக்கு பின்புலமாக இந்த நடவடிக்கையை எடுக்க அமெரிக்கா இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.