ரஷ்ய விமானம் விபத்து: 65 உக்ரைனிய கைதிகள் பலி!!

ரஷ்ய-உக்ரைன் எல்லைப் பகுதியில் இலியுஷின் விமானம் விழுந்ததாக ரஷ்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

65 உக்ரேனிய போர்க் கைதிகள், 6 பணியாளர்கள் மற்றும் மூன்று பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம் இன்று புதன்கிழமை காலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்தவர்கள் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு அருகில் உள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்துக் குறித்த காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. அந்த விமானம் Ilyushin-76 ரக விமானம் என்று தெரியவந்தது. பேரழிவு நடந்த இடத்திற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

இன்று புதன்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போர்க் கைதிகளைப் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் இந்த விமான விபத்து நடந்தது. இந்நிலையில் யார் யார் உயிரிழந்தார்கள் என்பது குறித்து சரிபார்க்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.