12 வயது மகளையும், மகளின் நண்பியையும் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

பதின்ம வயது சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக தந்தை ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது சொந்த மகளையும் மகளின் நண்பியையும் குறித்த நபர் துபிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபராவார். சம்பவத்தில் 12வயது, 11 வயதுடைய இரு சிறுமிகளே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்.

ஊர் மக்களால் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.