இரத்தினபுரியில் சரியான தமிழ் பாடசாலை இல்லாத காரணத்தால் தமிழ் மாணவர்கள் மிகுந்த அவதி!

தமிழ் மொழி மூலம் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு இரத்தினபுரி பிரதேசத்தில் தகுதியான பாடசாலை இல்லாத காரணத்தினால் மாணவர்கள் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை ஆகிய இரு நகரங்களிலும் தமிழ் மொழி மூல மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த அவர், தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு வெற்றிடமான ஆசிரியர்களை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான பிரச்சினையை சப்ரகமுவ மாகாண ஆளுநருக்கு அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் தகவல் பெற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கமைவாக தமிழ் ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்காலத்தில் நிரப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பாடசாலை தேவையென்றால் அதற்கும் ஆலோசனைகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.