கடந்த 24 மணி நேரத்தில் 210 பேர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 25,700 பேர் இறந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 210 பேர் கொல்லப்பட்டனர்.

முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் அக்டோபர் 7ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 25,700 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 210 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 400 பேர் காயமடைந்தனர்.

சண்டை தொடங்கியதில் இருந்து காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இப்போது வரைக்கும் 63,740 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

உயிரிந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே அதிகமாகக் காணப்படுகிறன்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.