ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு: போக்குவரத் நொிசலை ஏற்படுத்தியது

 

மேற்கு மற்றும் தெற்கு ஜேர்மனியை புதன்கிழமை தாக்கிய கடுமையான குளிர்கால பனி புயல், நாட்டின் நெடுஞ்சாலைகளில் கிலோமீட்டர் நீளமான போக்குவரத்து நெரிசல் உட்பட பெரும் போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

பனி மற்றும் வழுக்கும் சாலைகள் பல விபத்துகளுக்கு வழிவகுத்தன. மேலும் பல மகிழுந்துகள் மற்றும் பாரவூர்திகள் கடும் பனியில் சிக்கியுள்ளன.

சில சமயங்களில் பனியைக் கரைக்கும் உப்புகளை வீசும் வாகனங்கள், சிக்கித் தவிக்கும் வாகனங்களை கடந்து செல்ல முடியாமல் வீதிகள் தடைப்பட்டதால் பனியை அகற்ற சிரமம் ஏற்படுகிறது.

அவசர சேவைகள் தங்கள் வாகனங்களில் சிக்கியவர்களுக்கு போர்வைகள் மற்றும் சூடான பானங்களை வழங்கினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.