கத்தியைக் காட்டி கொள்ளையிட்டோர் யாழ் பொலிசாரால் மடக்கிப் பிடிப்பு

யாழ் மாவட்டத்தில் இரவில் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த கும்பல் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு, திருடப்பட்ட 30 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

LBC Tamil Kalviyankadu

யாழ் மாவட்டத்தில் இரவு வேளைகளில் கூரையினை பிரித்து வீட்டுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கத்தியை காட்டி, நகைகளை கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலையங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து சங்கிலியன் வீதிப் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட 24 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு, இணுவில் பகுதியில் திருடப்பட்ட நான்கு பவுண் நகையும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், வாள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நல்லூர் பின் வீதியால் செல்லும் வயது முதிர்ந்தவர்களை மிரட்டி கைத்தொலைபேசிகளையும் சிறிய தொகைப் பணத்தையும் திருடும் சம்பவங்களிலும் குறித்த சந்தேக நபர்கள் ஈடுபட்டிருந்தமை கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.