யாழில் மாணவிகள் படுத்து எழும்ப மணித்தியால வாடகை!! பலரின் உறவு வீடியோக்கள்!!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மிக வேகமாக பாலியல் துர்நடத்தைகள் அதிகரித்து உள்ளன.

யாழ்ப்பாண நகர் பகுதிகளுக்கு அண்மையில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவிகளை குறி வைத்து அவர்களை துர்நடத்தைகளுக்கு உள்ளாக்குவதற்கென்றே ஒரு குழு ஈடுபட்டுன்றது.

காதல் என்ற போர்வையிலும் பணம், கார்களைக் காட்டியும் குறித்த குழுக்கள் மாணவிகளை வேட்டையாடி வருகின்றன. தனது மகள் ரியூசன் மற்றும் மேலதிக கற்றல் நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றாள் என பெற்றோர்கள் நினைக்கின்றார்கள்.

ஆனால் அவ்வாறு செல்லும் மாணவிகள் மற்றும் இளம் யுவதிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் இலக்கு வைக்கப்பட்டு பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றார்கள்.

இவ்வாறான யுவதிகளை சொகுசு வாகனங்கள் மற்றும் பண ஆசை, வேலை வாய்ப்பு போன்றவற்றை காட்டி தமது இச்சைகளுக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இவ்வாறானவர்களுக்காக யாழ் நகர் மற்றும் புற நகர்ப் பகுதிகளில் சில சொகுசு வீடுகளில் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. அங்கு செல்லும் ஜோடிகளுக்கு சாப்பாடு முதல் சாராயம் வரை வழங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

(விரைவில் இவ்வாறான விடுதிகள் மற்றும் தங்குமிடங்களி்ன் புகைப்படங்கள் மற்றும் அவற்றின் சொந்தக்காரர்களின் பெயர் விபரங்களுடன் நாம் இங்கு பதிவிடுவோம்)

குறிப்பாக க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவடைந்த பின்னர் மேலதிக கற்கை நெறிகளை கற்பதற்காக யாழ் நகரப்பகுதிகளுக்கு வரும் இளம் யுவதிகளே காமுகர்களால் குறி வைத்து அவர்களின் பாலியல் வேட்டையில் சிக்கி வருகின்றார்கள்.

யாழ் முற்றவெளி மற்றும் பண்ணைப் பகுதிகளுக்கு மாஸ்க் அணிந்து வரும் யுவதிகள் கார்களில் ஏற்றிச் செல்லப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் அதே இடங்களில் கொண்டு வந்து இறக்கி விடப்படுகின்றார்கள்.

கார் ஒன்றை வைத்து 15 க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ எடுத்து பெருமைக்காக வைத்திருப்பவனும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றான். (இவ்வாறான கார்களின் இலக்கத்தகடுகள் மற்றும் யுவதிகளின் வீடியோக்களும் சிலரிடம் உள்ளமை தெரியவருகிறது.)

இதே வேளை கள்ளக்காதல் நடவடிக்கைகளும் தாரளமாக இடம்பெறுகின்றன. யாழ் சுண்டுக்குழிப் பகுதிக்கு அருகில் உள்ள முக்கிய அரசாங்க சபை ஒன்றின் பெண் ஊழியருடன் விடுதி ஒன்றில் அரச ஊழியர் ஒருவர் சல்லாபம் செய்யும் காட்சிகள் தற்போது உலா வருகின்றன.

குறித்த விடுதி உட்பட இவ்வாறான விடுதிகளுக்கு சென்ற ஏராளமாக அரச ஊழியர்களின் பாலியல் லீலைகள் தற்போது பலரது கைகளில் கிடைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே வேளை யாழில் உள்ள பிரதேசசெயலக விதாணை ஒருவர் பெண் ஒருவருடன் வீடு ஒன்றில் அந்தரங்கமாக இருக்கும் போது சோதனை நடவடிக்கைக்காக சென்ற பொலிசாரிடம் கையும் மெய்யுமாக அகப்பட்ட சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

கஞ்சா விற்கப்படுவதாக பொலிசாருக்கு வந்த இரகசியத் தகவலை அடுத்து அந்த வீட்டுக்குச் சென்ற பொலிசார் விதாணையையும் குறித்த வீட்டில் இருந்த இளம் பெண்ணையும் நிர்வாணக் கோலத்தில் பிடித்து எச்சரித்து விட்டதாக தெரியவருகின்றது.

குறித்த பெண்ணின் கணவர் வேலை வாய்ப்புக்காக மலேசியா சென்ற பின்னர் அவரது தொடர்புகள் இல்லாமல் போனதாக தெரியவருகின்றது. அதன் பின்னர் அப்பகுதி விதாணையே பெண்ணின் அந்தரங்க செயற்பாட்டு பொறுப்பாளராக இருந்துள்ளார்.

இதனைப் பொறுக்க முடியாத சிலர் விதாணை பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த பின்னர் பொலிசாரிடம் போட்டுக் கொடுத்ததாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடக்கும் அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களின் பாலியல் முறைகேடுகள் தொடர்பான பெருமளவு வீடியோக்கள் கைவசம் உள்ளதாகவும் இவ்வாறானவர்கள் தொடர்ச்சியாக சமூகபிறழ்வான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவற்றை ஊடகங்கள் மூலம் பெயர் விபரங்களுடன் வெளிப்படுத்தவுள்ளதாகவும் சமூக அக்கறையாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.