82 வயது மூதாட்டியை வன்புனர்வு செய்த 28 வயது இளைஞர்! நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன?

11 வருடங்களுக்கு முன் 82 வயது மூதாட்டியை வன்புனர்வு செய்த 28வயது இளைஞரான சந்தன குமாரவிற்கு நேற்று காலி பலப்பிட்டிய நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான குறித்த 82வயது மூதாட்டி மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையிலேயே நேற்று செவ்வாய்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

இலங்கையின் காலி மாவட்டதிற்கு உட்பட்ட ரந்தொடுவில பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 82 வயது மூதாட்டி வலுக்கட்டாயமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த சம்பவம் 09.02.2012 அன்று இடம்பெற்றது.

11 வருடங்களாக இடம்பெற்ற நீண்ட விசாரணையின் பின், மருத்துவ அறிக்கைகள் மற்றும் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில், 82 வயது மூதாட்டியை வன்புனர்வு செய்தவரை  சந்தேகத்திற்கு இடமின்றி நீதிமன்று உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் வன்புனர்வு செய்த நபருக்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 25 ஆயிரம் ரூபாயை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 2 வருட சிறைத்தண்டனை வழங்குமாறு பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.