மட்டக்களப்பில் 15 வயது பாடசாலை மாணவியை கடத்தி துஷ்பிரயோகம் செய்த மூவர்!

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது பாடசாலை மாணவியை கடத்தி சென்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்த 3 சந்தேகநபர்கள் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் கடந்த 5ம் திகதி மாணவியை ஆரையம்பதி பகுதிக்கு அழைத்து சென்று அங்கு அவரை தாக்கி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவியின் குடும்பத்தினர் முறைப்பாடு பதிவு செய்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.