மானிப்பாய் இளைஞர்கள் இருவர் கந்தக்காட்டிற்கு அனுப்பப்பட்டது ஏன்?

www.lbctamil.com

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 24, 25 வயதுடைய இளைஞர்கள் சட்ட வைத்திய அதிகாரிக்கு முன்னர் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட போது குறித்த இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து இரு இளைஞர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய போது அவர்களை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மன்று உத்தரவு பிறப்பித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.