16 வயது மருமகளை துஷ்பிரயோகம் செய்த மாமனார், பெரியகுளம் பகுதியில் சம்பவம்!

(JVP News) தனது 18 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக எதிர்பார்த்திருந்த 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 37 வயதுடைய நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஆனமடுவ பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தற்போது 16 வயதில் இருக்கும் சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்தவுடன், கூலித்தொழில் செய்து வரும் தனது 18 வயது மகனை, திருமணம் செய்து வைப்பதாக குடும்பத்தினர் தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

இந்த நிலையில் 18 வயதுடைய இளைஞன் தான் திருமணம் செய்ய எதிர்பார்த்து இருக்கும் அச்சிறுமியை தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளார்.

18 வயது  இளைஞனின் தாயும் கர்ப்பமாக இருந்தமையினால் தனது தாயை மருத்துவ பரிசோதனைகளுக்காக சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அந்த இளைஞனின் தந்தை, அச்சிறுமியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதுது.

இளைஞனின் தந்தையினால் தொடர்ச்சியாக  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் குறித்த சிறுமி, இளைஞனிடம் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில்  சந்தேக நபர் ஆனமடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.