திருகோணமலை சேருநுவரவில் கத்தி குத்தில் ஒருவர் மரணம்!

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்டபகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த கத்திக்குத்து தாக்குதலினால் உயிரிழந்தவர் சேருநுவர கல்வல சந்தியில் வசித்து வந்த எம்.ஜீ. சஞ்சீவ கருணாரத்ன (41வயது) எனவும் தெரிய வருகின்றது.

அனுராதபுரம் கண்னேவ பகுதியில் வசித்து வந்த சம்பிகாகுமாரி என்பவர் திருமணம் செய்திருந்த வேளையில் கணவரை விட்டு பிரிந்து சேருநுவர பகுதியில் மற்றுமொரு நபருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் முதலாவது கணவர் மனைவியை தேடி வந்து மனைவியுடன் வாழ்ந்து வந்த குறித்த நபரைக் கத்தியால் குத்தினார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த குறித்த நபரின் சடலம் சம்பவ இடத்தில் காணப்பட்டது. சடலத்தை பார்வையிட சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் வருகை தர உள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளை சேர நுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.