யாழில் இளம் ஆசிரியை திடீர் சாவு, மரணத்தில் சந்தேகம்!

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இளம் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்படி ஆசிரியைக்குக் கடந்த சில நாட்களாக உடல் சுகயீனம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவருக்குப் பில்லிசூனியம் ஏற்பட்டது எனத் தெரிவித்து அவருடைய தந்தையும் குறித்த ஆசிரியையும் இளவாலை முள்ளானை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் தங்கி குணமாக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியைக்குக் கடந்த வெள்ளிக்கிழமை வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டது. அவர் போதகர் மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சடலத்தைப் புதைக்குமாறு கூறி, சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.