மிக சிறந்த மொட்டு வேட்பாளரை இறக்குவோம்: மஹிந்த திட்டவட்டம்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் சிறந்த வேட்பாளரை களமிறக்குவோம்” – என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அநுராதபுரத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதன் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளும் மஹிந்த ராஜபக்ச வழங்கிய பதில்களும்:

கேள்வி:- உங்களின் தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உங்களின் அரசியல் அந்தக் கட்சியில் இருந்தே ஆரம்பமானது. ஆகவே, கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. பிரச்சினைகளுக்குப் பேச்சுகள் ஊடாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

கேள்வி:- உங்களின் பங்காளிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே.. அது உங்களுக்குச் சவாலாக அமையாதா?

பதில்:- சவால் ஏதுமில்லை. தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுவது இயல்பானதே.

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாரே?

பதில்:- அது அவரது நிலைப்பாடு. நாங்கள் எமது கட்சியின் வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் நிறைவேற்று சபை ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுப்போம். மிகச் சிறந்த வேட்பாளரைக் களமிறக்குவோம்.

கேள்வி:- நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப் போகின்றீர்களா?

பதில்:- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் உள்ளது.

கேள்வி:- புத்தாண்டு தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் குறிப்பிட விரும்புகின்றீர்களா?

பதில்:- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மகிழ்வுடன் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.