திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலை திறக்கப்பட்டது!

திருகோணமலை – மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வந்த புத்தர் சிலை திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை, சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட மடத்தடி பகுதியில் வீரகத்தி பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான காணியில் கடந்த மார்ச் 22 ஆம் திகதி  சட்டவிரோதமான முறையில் கட்டுமானம் செய்யப்பட்டு வந்த புத்தர் சிலை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) மாலை அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் சிறிய அளவிலான மக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சட்டவிரோத முறையில் தமிழ் மக்களின்  எதிர்ப்பினை மீறி புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. இந்த இடத்திலேயே இப்பொழுது  பாரிய கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு புத்தர் சிலை நிறுவப்பட்டது.

இது போன்ற பௌத்தமயமாக்கள் மூலம் தமிழர் பகுதிகளில் உள்ள தமிழர்களின் காணிகள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றது. சிறிய புத்தர் சிலை வைப்பதில் தொடங்கி அது விகாரையாக மாற்றப்பட்டு சிங்கள குடியேற்றங்களை குடியேற்றுவது வரையான செயற்பாட்டை அரச அனுசரணையுடன் சிலர் செய்து வருகின்றனர். இதற்கு அரச நிர்வாகமும் துணைபோவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

81 சதவீத தமிழ் மக்கள் வாழ்ந்த திருகோணமலையில் தற்போது 32 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர். திட்டமிட்ட வகையில் தமிழர் இனபரம்பலை மாற்றியமைக்கும் ஶ்ரீலங்கா அரசின் திட்டமிட்டு செயற்பாடு தொடர்ந்து இடம்பெற்றூ வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.