யாழில் 39வயதான 2 பிள்ளைகளின் தாயுடன் 26 வயது இளைஞன் ஓட்டம்! தெய்வீக காதலே காரணம்!

யாழ்ப்பாணத்தில் 2 பிள்ளைகளின் தாயான 39 வயது குடும்ப பெண்ணுக்கும் 26வயதான இளைஞனுக்கும் ஏற்பட்ட காதலால் இரு பிள்ளைகளையும் விட்டுவிட்டு இளைனுடன் தாய் மட்டக்களப்புக்கு ஓடிசென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள புடவையகம் ஒன்றில் பணியாற்றும் 26 வயதுய இளைஞனே, அதே பகுதியை சேர்ந்த 39 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயுடன்  தலைமறைவானார்.

புடவையகத்தில் ஆடை வாங்க வரும் போது, அந்த பெண்ணுக்கும், இளைஞனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, தெய்வீக காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் சில காலம் காதலித்த வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் வீடுகளில் சொல்லாமல் தலைமறைவாகி விட்டனர்.

தலைமறைவான ஜோடி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரையண்டிய பகுதியொன்றில் தங்கியிருக்கும் தகவலறிந்த இளைஞனின் குடும்பத்தினர், வாகனத்தில் அங்கு சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட இடமொன்றில் பல மணித்தியாலங்களாக காவல் நின்று, அந்த இளைஞன் வர்த்தக நிலையத்தில் பொருள் வாங்க வந்தபோது, வழிமறித்துள்ளனர். தம்முடன் வருமாறு குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இளைஞன், தனது காதல் தேவதையுடனே வாழ விரும்புவதாகவும், என்ன முடிவெடுப்பதென்றாலும் காதல் தேவதையுடன் கலந்தாலோசித்தே முடிவெடுக்க வேண்டுமென்றார்.

காதலியிருக்கும் இடத்துக்கு போகலாமென தீர்மானித்த குடும்பத்தினர், இளைஞனையும் ஏற்றிச் செல்ல முற்பட்டனர். எனினும், இளைஞன் அதற்கு சம்மதிக்கவில்லை. எல்லோரும் சென்றால் காதலி பயந்து விடுவார் என்றும், யாராவது ஒருவர் மாத்திரம் தன்னுடன் வரலாமென்றும் நிபந்தனை விதித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.