பொலிஸ் துப்பாக்கி சூட்டில் இளைஞன் படுகாயம்

பொலிஸாரால் திஸ்ஸமஹாராம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ​​துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 28 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள சூதாட்ட நிலையம் ஒன்றை பற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து,  சோதனையிடுவதற்காக பொலிஸ் குழு ஒன்று சென்றது.

இதன்போது பொலிஸாரை கண்டதும் சூதாட்ட​ நிலையத்தில் இருந்தவர்கள் தப்பி  செல்ல முற்பட்டனர்.

தப்பி செல்ல முற்பட்டவர்களை கைது செய்ய முற்பட்ட போது ​​பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.