யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கு விருது

இலங்கை தமிழரசு கட்சி ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 126வது பிறந்த தின விழாவும், விருது வழங்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

தந்தை செல்வா நற்பணிமன்ற ஏற்பாட்டில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் முன்னதாக வழக்கம்பரை அம்மன் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர்கள் மற்றும் விருது பெறுபவர்கள் மேளதாளங்களுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் ஊடகத்துறை சார்பில் தீம்புனல் பத்திரிகையின் ஆரியர் ஏ.ரவிவர்மா, ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் ஏ.தேவராஜன், சக்தி ரி.வி தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் வி.கஜீபன், யாழ்.தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியர் க.ஹம்சனன், டான் ரி.வி தொலைக்காட்சியின் உதவி ஆசிரியர் இ.நிர்மல் உள்ளிட்டோருக்கும், வைத்திய துறை மற்றும் சமுகசேவை உள்ளிட்ட பல துறைகளில் சாதித்த 20 பேருக்கு ”தந்தை செல்வா விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதேவேளை  தெரிவு செய்யப்பட்ட 200 பேருக்கு மூக்குகண்ணாடி வில்லைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.