பொத்துவில் விடுதி அறையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

அம்பாறை பொத்துவில் பகுதியிலுள்ள விருந்தினர் விடுதியில் பெண் ஒருவரை கொலை செய்த நபர் அதே அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

பொத்துவில் – அருகம்பே பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இருந்து குறித்த இரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெண்ணை குத்தி கொலை செய்த நபர், பின் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தங்கியிருந்த  அறை நீண்ட நேரம் திறக்கப்படாமையால், ஹோட்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸாரின் உதவியுடன் அறை திறக்கப்பட்ட போது, வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டது.

அறையின் குளியலறையில் குறித்த தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்  மீட்கப்பட்டது.

மஹகலுகொல்ல பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணும், பொத்துவில் பகுதியை சேர்ந்த 51 வயதுடைய ஆணுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.