அப்பாவும் தம்பியும் உறவு கொண்டனர், நடு இரவில் உறவுகொள்ள அண்ணா வருவார்! கர்பிணியான 15 வயது சிறுமி வாக்கு மூலம்!

தரம் 10இல் கல்வி கற்கும் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சகோதரனை கைது செய்ய வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வயிற்று வலி காரணமாக வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு தாயுடன் சென்ற போது, ​​சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் போதே, 2019 ஆம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை மூத்த சகோதரனால் பலமுறை வன்புணரப்பட்டமை தெரிய வந்தது.

அதன்படி, சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​நள்ளிரவு 12 மணிக்கு பிறகு, வீட்டில் உள்ளவர்கள் தூங்கச் சென்றதும், ​​அவரது மூத்த சகோதரர் தன்னுடைய அறைக்கு வந்து, தொடர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், தனது தந்தை மற்றும் தம்பியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.

கடைசியாக ஜனவரி 12 மற்றும் ஏப்ரல் 19 ஆகிய திகதிகளில் மூத்த சகோதரர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அச்சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.