பதுளையில் 28 வயதான இளம் ஆசிரியை தற்கொலை

பதுளை – லுணுகலை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.

பதுளை – பிட்டமாருவ பகுதியில் உள்ள பாடசாலையில் கடமை ஆற்றிய ஆசிரியை இவ்வாறு தனது உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவர் குறித்த பாடசாலையின் ஆசிரியை விடுதியில் வசித்து வந்துள்ள நிலையில், இவர் நேற்று (24) பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின் விடுதிக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஆசிரியை விடுதிக்குச் சென்றவர் மீண்டும் பாடசாலைக்கு திரும்பாததால் அவருடன் கடமையாற்றும் ஏனைய ஆசியைகள் குறித்த விடுத்திக்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.