19 வயது காதலி, 44 வயது காதலன்; யாழில் நடந்த பேஸ்புக் திருமணம்!

யாழ்ப்பாணத்தில் 19 வயதான யுவதியும், 44 வயதான பேஸ்புக் வெளிநாட்டு காதலனும் திருமணம் செய்துள்ளனர்.

கடந்த வாரம் இந்த திருமணம், பெரும் களேபரங்களிற்கு மத்தியில் கோப்பாய் பகுதியில் நடைபெற்று முடிந்துள்ளது.

19 வயதான யுவதி உயர்தரம் கற்று கொண்டிருந்த போதே, கடந்த சில மாதங்களாக பேஸ்புக் காதலில் வீழ்ந்ததாக தெரிய வருகிறது. கனடாவில் வசித்து வரும் சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.

அது தெய்வீக காதலென இருவரும் நம்பியதால், தமக்கு இடையில் உள்ள வயது வித்தியாசததை அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை. காதலனிற்கு 44 வயது.

சில வாரங்களிற்கு முன்னர் காதலன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

யுவதி தனது வீட்டில் காதல் விவகாரத்தினை கூறியுள்ளார். வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்த போது, கடந்த வாரம் வீட்டில் இருந்து இரகசியமாக வெளியேறி, பேஸ்புக் காதலனின் உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்தார்.

இருவரது திருமணம் செய்வது உறுதியானதை அடுத்து, யுவதியின் பெற்றோர் எதிர்ப்பினை கைவிட்டு, திருமண நிகழ்வில் கலந்திருந்தனர்.

தென்மராட்சியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.