ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு, செய்வதாக வாக்களித்தார் மோடி – மதுரை ஆதின பீடாதிபதி தகவல்

“இந்தியாவால் இலங்கைக்கு வழங்கிய கச்சதீவை மீட்டெடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர் பகுதியை தனிநாடாக மாற்ற வேண்டுமென மதுரை ஆதீனத்தின் பீடாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் கோரிக்கை விடுத்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு இந்தியப் பிரதமர் நேற்று வந்த வேளை மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியை வழி யில் சந்தித்து தனது வாகனத் தொடர ணியை நிறுத்திப் பேசினார். இவ்வாறு இடம்பெற்ற பேச்சு தொடர்பில் மதுரை ஆதீனத்தின் பீடாதிபதி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கச்சதீவு இலங்கை வசமிருப்பதால் இந்திய மீனவர்கள் கஷ்டப்படுகின்றார்கள். எனவே, இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வழங்கிய கச்சதீவை மீட்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அங்கு தமிழர் பகுதியை தனி நாடாக மாற்ற வேண்டும். இப்படி இந்தியப் பிரதமரிடம் நேரில் கோரிக்கை விடுத்தேன். இவற்றைக் கேட்ட பிரதமர் அவற்றைச் செய்வதாகக் கூறியுள்ளார்.” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.