தியாகியின் நிவாரணம் தமிழ்நாட்டிலும்!

தமிழ்நாட்டை வெள்ளம் புரட்டிப் போட்டதால் தமிழக முகாங்களில் இருக்கும் ஈழ அகதிகளின் நிலைமையை அறிந்த வாமதேவன் தியாகேந்திரன் யாழில் இருந்து அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளார்.

தமது மக்களுக்கு வழங்கும் போது அருகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களும் இருந்ததால் அந்த மக்களை புறக்கணிக்காமல் அவர்களுக்கும் நிவாரணம் வழங்கியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக அகதி முகாமில் இருக்கும் 450 ஈழக்குடும்பங்களுக்கும், 750 இந்தியக் குடும்பங்களுமாக 1200 குடும்பங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கும் உதவி செய்வதற்கு தயாராகி வருவதாக வாமதேவன் தியாகேந்திரன் அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.