மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த இரு ஆசிரியர்கள் மற்றும் ஓட்டோ சாரதிக்கு 42 வருட சிறை!

வெவ்வேறு பாடசாலைகளை சேர்ந்த மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட இரு ஆசிரியர்கள், ஓட்டோ சாரதி ஆகிய மூவருக்கும் மொத்தமாக 42 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதில், இரு சம்பவங்களுக்கான தீர்ப்பு நேற்று புதன்கிழமை (14) வழங்கப்பட்டது மற்றொரு சம்பவத்துக்கான தீர்ப்பு, ஜனவரி 31ம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவி ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கொட்டக்கலை பகுதியை சேர்ந்த (43) வயதுடைய பாடசாலை ஆசிரியரை 17 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு தீர்ப்பை வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும். தண்டப் பணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை செலுத்தாவிட்டால் 3 வருட ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனை என உத்தரவிட்டார்.

அத்துடன் வலப்பனை பகுதியை சேர்ந்த ஓட்டோ சாரதியான 35 வயது நபர், தனது உறவுக்கார பிள்ளையான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 2013 ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 07 லட்சம் ரூபாய் நட்ட ஈட்டு வழங்க வேண்டும். 25 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்த வேண்டும். இவைகளை செலுத்ததவறும் பட்சத்தில் மேலும் 06 மாத சிறை எனவும் தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியருக்கு கடந்த ஜனவரி 31ம் திகதி 15 வருட கடூழிய சிறை வழக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.