ஆசிரியர் ஆவதற்கு ஆசையா? விண்ணப்ப காலம் 10ம் திகதியுடன் முடிவு!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்ப காலம் எதிர்வரும் 10ம் திகதி அதாவது நாளை வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://ncoe.moe.gov.lk/NcoeWebApp/#/ எனும் இணையத்தளத்திற்குள் சென்று ஒன்லைனில் உள்ள விண்ணப்பபடிவத்தை நாளை புதன்கிழமை நள்ளிரவு 11.59இற்கு முன்னர் பூரணப்படுத்துங்கள்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிக்கு இணைத்து கொள்ளப்பட உள்ளனர்.

கடந்த 5ம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமது விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமாயின், ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 17 ஆம் திகதி நள்ளிரவு வரை மாத்திரம் அதற்கான அவகாசம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.