இவ்வுலகை விட்டு பிரிந்தார் சாந்தன்!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல்நல குறைவால் இந்தியாவில் காலாமானார்.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதன்பின் கடந்த 2022ம் ஆண்டு, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றா நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தன் ஈழ தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டார்.

தாயுடன் சேர்ந்து வாழ்வதற்காக தன்னை இலங்கை அனுப்ப வேண்டுமென கோரி வந்த நிலையில் இதற்கு இலங்கை அரசும் இந்திய அரசும் இலங்கை அரசும் அனுமதி வழங்கியது.

எனினும், கடந்த ஜனவரி 24-ம் தேதி சாந்தனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படதா நிலையில் கோமநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் இந்த உலகை விட்டு பிரிந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.