மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், முல்லைத்தீவு நீதிமன்றின் உத்தரவு!

பாடசாலையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணையில்செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமைபுரியும் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிடைத்த முறைப்பாட்டை  அடுத்து 24.12.21 அன்று பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அடுத்தடுத்து விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்ட நிலையில் 18.01.2022 நேற்றைய தினம் வழக்கு தவணையிடப்பட்டு இருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்ட நிலையில்,

குறித்த ஆசிரியர் 5 இலட்சம் பெறுமதியான இரு ஆட்பிணையிலும் 25000 காசு பிணையிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் 9 தொடக்கம் 12 மணிக்குள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிடுமாறும் சாட்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படகூடாது எனும் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

குறித்த வழக்கு 05.04.2022 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.