ஜப்பானில் நிலநடுக்கம், ஊருக்குள் வரும் கடல்நீர் – சுனாமி எச்சரிக்கை

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகமெங்கும் புத்தாண்டின் முதல் நாளை மக்கள் இன்று மகிழ்ச்சியோடு கொண்டாடி வரு நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அந்நாட்டு மக்களை பெரும் அச்சத்தில்  ஆழ்த்தியுள்ளது.

5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டமையினால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து ஜப்பான் நாட்டு வானிலை மையம் தெரிவிக்கையில், “ இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோவை 5 மீ உயரம் வரை சுனாமி தாக்கும். வாஜிமா நகரின் கடற்கரையை 1 மீட்டருக்கும் அதிகமான அலைகள் தாக்கும் .ஹோன்ஷீ அருகே 13 கி.மீ ஆழத்தில் உருவான நிலநடுக்கத்தால் 15 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் ரிக்டர் அளவுகோலில் 6 க்கு மேல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடகொரியா தென் கொரியா மற்றும் ரஷ்யாவின் சைபீரியாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் கட்டடங்கள் அதிர்ந்ததால் வீடுகளில் இருந்து வீதிகளில் ஜப்பான் மக்கள் தஞ்சமடைந்த இருக்கின்றனர். சாலைகள் விரிசல் விட்டு பிளந்து காணப்படுகிறது. ரயில் நிலையங்கள், வீடுகள், கடைகள் குலுங்கி சேதம் அடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.