43 வயது மனைவி கொலை, 25 வயதான கணவன் கைது!

43 வயதுடைய மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் பெயரில் குறித்த பெண்ணின் கணவரான 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரகஸ்மன்ஹந்திய, மெய்கஸ்பிட்டிய வீதியில் அமைந்துள்ள ஸ்டிக்கர் கடையில் நேற்று (11) காலை கழுத்து நெரிக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட இரத்தத்தில் தோய்ந்த நிலையில் 43 வயதுடைய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு இருந்தது.

இதில் 43வயதுடைய ஊராகொட விதானகே யமுனா நிரோஷனி எனும் பெண்ணே கடையின் பின்புறம் உள்ள அறையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு நேற்று (11) காலை வருகை தந்த எல்பிட்டிய பதில் நீதவான் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

அதிகாலை 5.45 மணியளவில் மனைவி கணனியில் வேலை பார்த்துகொண்டு இருந்த போது இருவர் வந்து கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான லால் நிஷாந்த  பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கொலையாளிகள் இருவரும் மனைவியிடம் பணம் கேட்டதாகவும், பணத்தை வழங்காமையினால், கூரிய ஆயுதத்தால் கழுத்தில் தாக்கியதாக பெண்ணின் கணவர் மேலும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொலையாளிகள் எத்திசையில் தப்பி சென்றனர் என விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கொலை செய்யப்பட்ட நபரின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

குடும்ப தகராறு காரணமாக இக்கொலை இடம்பெற்றதா எனும் கோணத்தில் போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.