முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் வயல்நீர் வடிந்தோடும் குட்டை ஒன்றிற்குள் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.

தேவிபுரம் அ பகுதியை சேர்ந்த 65 வயதுடைய முனுசாமி திருச்செல்வம் என்பவர் கூலி வேலை செய்துவிட்டு வீடு திரும்பிய போது கைவேலி வயல்வெளிபகுதியில் உள்ள குட்டைக்கு ஒன்றுக்கு அருகில் அவரது மிதிவண்டி காணப்பட்டது.

இதனை அறிந்த வீதியால் சென்றவர்கள் அவரை தேடி பார்த்தபோது குறித்த குட்டைக்குள் விழுந்த நிலையில் ஒருவர் காணப்பட்டுள்ளார்,

குட்டைக்குள் இருந்து மீட்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது, உயிரிழந்தவரின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.